குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 16:53 GMT

சந்தவாசல் சி.சி. ரோட்டில் இருந்து ஆரணி ரோட்டில் நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆதவன் நகர் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி தற்போது பழுதடைந்துள்ளது. அதைச் சீர் செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் செய்தும் சீரமைக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதவன்நகரில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா?

-ரமேஷ்குமார், சந்தவாசல்.

மேலும் செய்திகள்