திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியின் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குடிநீர் தொட்டியைப் பராமரித்து, குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்த வேண்டும்.
-சோமசுந்தரம், திருப்பத்தூர்.