வாலாஜாபேட்டை கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தத் தெரு மக்களுக்கு கடந்த ஒரு மாதமாகக் குடிநீர் சப்ளை செய்யவில்லை. வெயில் காலத்தில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி வாலாஜா நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா?
-மதியழகன், வாலாஜா.