குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுது

Update: 2022-08-18 13:13 GMT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இஸ்மாயில் நகர் மற்றும் பாலாஜி நகர் பகுதி குடியிருப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தாய் திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டிக்கு வரும் போர்வெல் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதைச் சரி செய்யப்படாமலும், குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தாமலும் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உதாசினப்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைைய எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இஸ்மாயில் நகர், வடமாம்பாக்கம்.

மேலும் செய்திகள்