கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2026-06-14 19:20 GMT

காட்பாடி தாலுகா கீரைசாத்து ஊராட்சி குமரகுண்டா முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு கடந்த சில நாட்களாக வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் குடிநீரும் கலங்கலாக வருவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜான்ஜோசப், கீரைசாத்து. 

மேலும் செய்திகள்