விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா முகவூர் அசையாமணி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலை தோண்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் தற்போது வரை சாலை மூடப்படாததால் தற்போது மீண்டும் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதுடன் சாலையிலும் வழிந்தோடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் விணாகாமல் தடுக்கவும், சாலையை சீரமைத்து தரவும் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?