குடிநீர் தொட்டி சேதம்

Update: 2022-10-02 14:44 GMT

ஜோலார்பேட்டை அருகே ஊசி நாட்டம் வட்டம் பகுதியில் உள்ள பாரத கோவில் அருகே ஏலகிரி ஊராட்சி சார்பாக போடப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி மூலம் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மாற்றி தர வேண்டும்.

-ஜி.துரைராஜ், பெரியகம்மியம்பட்டு.

மேலும் செய்திகள்