காட்பாடி காங்கேயநல்லூர் நுழைவு வாயில் அருகே சக்தி விநாயகர் கோவில் முன்பு கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், காட்பாடி.