தண்ணீர் வினியோகம் செய்யவில்லை

Update: 2023-03-29 17:17 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு ரோட்டில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின் விசை தொட்டி அமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடந்த ஒரு வருடமாக சிறு மின்விசை தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்வதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்