பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2024-01-14 17:46 GMT

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லமங்கலம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டன. அந்தக் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், கொல்லமங்கலம்.

மேலும் செய்திகள்