அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் அடித்தளம் தரமாக இல்லாததால் அமைக்கப்பட்ட சில மாதங்களிலே குடிநீர் தொட்டி கீழே சாய்ந்து குழாய்கள் துண்டிக்கப்பட்டன. இதை, அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அப்பகுதி பொதுமக்களே குடிநீர் தொட்டியை கற்கள் மேல் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைத்துத்தர வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.