குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்

Update: 2022-11-06 12:56 GMT

மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள கிணற்றின் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் கிணறு அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணறை சுத்தம் செய்து அதில் உள்ள பாசி உள்ளிட்ட குப்பைகளை அகற்றி கிணற்றுக்கு மூடி போட்டு பராமரிக்க வேண்டும்.

-ராஜன், மங்கலம்.

மேலும் செய்திகள்