மழைநீர் வடிய கால்வாய் வசதி தேவை

Update: 2023-09-27 17:08 GMT

திருப்பத்தூர் நகராட்சி 10-வது வார்டு கோட்டை எஸ்.என்.நகர் பகுதியில் உள்ள நூர் மசூதி பின்பக்க தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் தெரு தாழ்வான பகுதியாகும். மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் எங்கள் பகுதியில் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீர் வடிய போதிய கால்வாய் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-பீரான், சமூக ஆர்வலர், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்