ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-07 15:27 GMT

திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக குனிச்சி அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், மொளகரம்பட்டி, செவ்வாத்தூர், புதூர், எலவம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினமும் குனிச்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தினமும் ெரயில்வே பாலத்தைக் கடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்களின் நலனின் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ெரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்துத் தர வேண்டும்.

-ஆனந்தன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்