குழாய் பொருத்த வேண்டும்

Update: 2022-08-31 11:28 GMT



திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி அருகே உள்ள கருந்துவாம்பாடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் பிடிக்கும் பைப்பில் தண்ணீரை திறந்து மூடுவதற்கு குழாய் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. அதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டிலை பைப்பில் சொருகி வைக்கின்றனர். ஆனால் அதன்வழியாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை தடுக்க தண்ணீரை திறந்து மூடுவதற்கு குழாய் பொருத்த வேண்டும்.


மேலும் செய்திகள்