நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாதெருவில் ஏரிக்கரையின் மீதுள்ள ஆழ்துளை கிணறு கடந்த 20 நாட்களாக பழுதடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
இல.குருசேவ். கவுன்சிலர், நாட்றம்பள்ளி பேரூராட்சி.