தடங்கம் ஊராட்சி பெருமாள்கோவில் மேடு, பாலாஜி நகர், வி.ஐ.பி. நகர், நந்தி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு வீடுகள், மேடான பகுதியில் உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்பு மக்களின் நலன் கருதி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.