ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் சிலர் குடிநீரை வெளியே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.