ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டி ஒண்டிவீரன் நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.