மேச்சேரி ஒன்றியம் ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் பாரப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சரிசெய்ய வேண்டும்.