சாயர்புரம் தேரி சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர், சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு செல்லும் பைப்லைன் இன்னும் சீரமைக்கப்படாததால், அப்பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.