உளுந்தூர்பேட்டை அருகே பாலி ஊராட்சி ஷேக் உசேன்பேட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. எனவே பலவீனமாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு அங்கு புதிதாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.