நொய்யல் குறுக்கு சாலை மற்றும் சுற்றியுள்ள அண்ணாநகர், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் சுமார் 2000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் இப்பகுதிகளுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.