குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-04-26 10:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது வரை இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்