கோத்தகிரியில் உள்ள தாசில்தார் மற்றும் கோர்ட்டு அலுவலகங்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த குழாய் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் மின் மோட்டாரை இயக்கும்போது தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.