சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2026-02-15 15:57 GMT
வேப்பூர் அடுத்த நெசலூர் கிராமத்தில் கிணற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு கிராமமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் தேங்கி மாசடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நீர், குழாய் வழியாக குடிநீரில் கலப்பதால் அதை குடிக்கும் கிராமமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்