கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2026-02-15 12:58 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முனியன்குறிச்சி கிராமத்தில் சின்னேரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் சுற்றுப்குதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஏரிக்கரை முழுவதும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏரிக்கரைக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கருவேல மரங்களில் குடியிருக்கும் விஷஜந்துக்கள் அப்பகுதி பொதுமக்களை தீண்டி அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிக்கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்