ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.