அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உள்ள சாணாகுளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் அங்கு கழிவுநீரும் கலந்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. மேலும் குளத்தின் கரைகளை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.