திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் பிச்சையம்மன் நகரில் வசித்து வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் இந்த உடைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீரானது தாழ்வாகன பகுதியில் தேங்கி நிற்பதினால், இப்பகுதியில் அதிகளவில் கொசு உற்பத்தியாகி வருகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.