ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி ஊராட்சி லீலாவதி நகர் குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.