வேலூர் புதிய மீன் மார்க்கெட், பழைய கால்நடை மருத்துவ மனைக்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலமுறை சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி அங்கு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அந்த இடத்தில் மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரச் கேடு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூரியமூர்த்தி, வேலூர்.