காட்பாடி பகுதியில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், உறவினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த ஆர்.ஓ. அமைப்பை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.