அருப்புக்கோட்டை சந்தையூர் ஆமணக்குநத்தம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீரின்றி கடும் அவதிக்கு உள்ளாவதோடு சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.