ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

Update: 2026-02-15 19:24 GMT

பள்ளிகொண்டா ஏரியில் நிரம்பி இருக்கும் தண்ணீர் 3 மதகுகள் வழியாக வெளியேறி வருகிறது. கோடைக்காலம் வருவதற்கு முன்பே ஏரியில் இருக்கும் அத்தனை நீரும் வெளியேறி விடுமோ என அச்சம் உள்ளது. பொதுப்பணித்துறையினர் மதகுகளை சீரமைத்து வெள்ளநீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியில் இருக்கும் ஒட்டுமொத்த நீரும் வீணாக வெளியேறிவிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து மதகுகளில் இருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்