அடிப்படை வசதிகள் தேவை

Update: 2025-11-02 12:14 GMT

சேலம் மாநகராட்சி 49-வது வார்டில் அன்னதானப்பட்டி நடுத்தெரு உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. குறிப்பாக முதியோர் கீழே விழுந்து காயமடைந்து விடுகின்றனர். எனவே இந்த பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குண்டும், குழியுமான சாலையை சரிசெய்தல், குடிநீர் குழாய் வசதி, குப்பை தொட்டி வைத்தல், தெரு விளக்கு வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றை செய்து தர வேண்டும்.

-குமார், அன்னதானப்பட்டி.

மேலும் செய்திகள்