கிணற்றுக்கு வேலி அவசியம்

Update: 2025-09-14 13:52 GMT

நல்லம்பள்ளி அடுத்த ராஜாகொல்லஅள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளும், அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீருக்காக பொது கிணறு உள்ளது. குடியிருப்புக்கு மத்தியிலும், அரசு பள்ளிக்கு அருகே இருக்கும் இந்த திறந்த வெளி கிணற்றின் மேற்பகுதியில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி, இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தற்போது இந்த இரும்பு வேலி ஆங்காங்கே பெயர்ந்து, திறந்த வெளி கிணறு பாதுகாப்பு இல்லாமல் அபாய நிலையில் உள்ளது. பலமுறை கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி கிணற்றுக்கு இரும்பு தடுப்பு வேலி அவசியம் அமைக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்