ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சி பாலாயிகுடிக்காட்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருந்தது. இந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த பகுதியில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.