திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அதிகமான செலவு செய்து குடிக்க மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொண்டு வருகிறது. அந்த தண்ணீர் சில இடங்களில் வீணாகிறது. குறிப்பாக மண்ணரை பழைய மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வீணாகிறது. எனவே அந்த குழாயை சீரமைக்க வேண்டும்.