எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி கிராமம் 11 வார்டுகளை கொண்டது. இதில் 2-வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு மேலாகியும் ஆழ்துளை கிணறு பழுதாகி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான ஆழ்துளை கிணற்றை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதி, எலச்சிபாளைம்.