தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-06-29 13:18 GMT

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் கிராம ஊராட்சி மூலமாக செங்குணம் அண்ணா நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வருவதில்லை. இதனால் ஏற்கனவே இம்மையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திய பலரும் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்