செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆகாயதாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.