குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-06-15 15:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் மண்டல பொது சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவிலியர்கள் பயிற்சிக்காக தங்கி படித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் வம்பன் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதியில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்