திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தண்ணீர் அவ்வப்போது கலங்கலாக வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.