மதுரை நகர் பெத்தானியாபுரம் 64-வது வார்டில் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகின்றது. அதிலும் கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.