ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி திருவள்ளூவர் நகர் பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி எடுக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.