கொட்டாரம் அருகே சுயம்புலிங்க நகர் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் மூலம் அப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த தெருவில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாயுடன் சேர்த்து மூடி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மூடப்பட்டுள்ள குழாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.