எரியோடு பேரூராட்சி பாண்டியன்நகரில் நள்ளிரவு நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து குடிநீர் பிடிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே பகலில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.