தரங்கம்பாடி தாலுகாவில் விஷலூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி இருந்து வருகிறது. செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், பாசன வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தண்ணீர் திறந்துவிடப்படும் போது பாசன வாய்க்காலில் நீர் செல்வதில் தடை ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.