திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சாத்தனூர் பஞ்சாயத்து இழுப்பையூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது கோடை வெயிலில் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.